DMK MLA Karunanidhi: கருணாநிதி அண்னனும், மறைந்த முன்னாள் திமுக எம்எல்ஏ அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது அதிருப்தி ஏற்படுத்தியது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 23 நாட்களே உள்ள நிலையில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கப்பட்டதை தடுத்து தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் திமுக வேட்பாளர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதில் காந்தி, கயல்விழி செல்வராஜ், மனோ தங்கராஜ், பொன்முடி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களுக்கு சீட் மறுக்கப்பட்டது. ஆனால் காந்தி மற்றும் பொன்முடி அவர்களுக்கு பதிலாக மகனுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
24
தி.நகர் - கருணாநிதி
அதேபோல் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தற்போது எம்எல்ஏவாக இருக்கும் 6 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எழும்பூரில் பரந்தாமன், தி.நகர் கருணாநிதி, வில்லிவாக்கம் - வெற்றியழகன், திருவிக நகர்- தாயகம் கவி, ராயபுரம்- ஐட்ரீம்ஸ் மூர்த்தி உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
34
மறைந்த ஜெ.அன்பழகனின் மகனுக்கு வாய்ப்பு
இந்நிலையில் தி.நகர் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ-வாக இருக்கும் கருணாநிதிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக கருணாநிதி அண்னனும், மறைந்த முன்னாள் திமுக எம்எல்ஏ அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது அதிருப்தி ஏற்படுத்தியது. வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் விடுபட்டதால் அதிருப்தியடைந்த கருணாநிதி, சென்னை தென்மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட தி.நகர் கிழக்கு பகுதி திமுக செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
அதில், தி.நகர் பகுதியில் பல ஆண்டுகளாகக் கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தனது உழைப்பிற்கும், நேர்மைக்கும் தற்போது உரிய அங்கீகாரம் இல்லை என கருதுவதால் மனவேதனையுடன் இந்த பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்தார். மேலும், தனக்கு இதுவரை ஒத்துழைப்பு வழங்கிய கட்சி தலைமைக்கும், உடன் பணியாற்றிய நிர்வாகிகளுக்கும் தனது நன்றியினை குறிப்பிட்டுள்ளார்.