சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரம் காவடிகாரனூர் பாலிப்பெருமாள் கோயில்காடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பழனியப்பன் - காளியம்மாள் (70), தம்பதியினருக்கு சாந்தி என்ற மகளும், முத்துசாமி (49) என்ற மகனும் உள்ளனர். மகள் சாந்தியை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திருமணம் செய்து கொடுத்து விட்டனர். மகன் முத்துசாமிக்கும் திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த சுமதி என்ற பெண்ணிற்கும் திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் முத்துசாமிக்கும் சுமதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இதனால் முத்துசாமி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த கோமதி என்ற கோவிந்தம்மாளை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு 10 வயதில் ஒரு மகன் மற்றும் 3 வயதில் ஒரு மகள் உள்ளனர்.