ப்ளீஸ்! தவெக மதுரை மாநாட்டிற்கு இவர்கள் யாரும் வர வேண்டாம்! விஜய் வேண்டுகோள்!

Published : Aug 18, 2025, 11:03 AM ISTUpdated : Aug 18, 2025, 11:12 AM IST

த.வெ.க. 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் 21ம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. வரும் தேர்தலில் தங்கள் பலத்தை நிரூபிக்கப்போவதாகவும், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் மாநாட்டை வீட்டில் இருந்தே காணுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

PREV
15
தவெக 2-வது மாநில மாநாடு

தவெக 2-வது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 21ம் தேதி மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்காக காவல்துறை அனுமதி கொடுத்த நிலையில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்: மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் மகத்தான மக்கள் அரசியல் இயக்கமான த.வெ.க. மீதான தமிழ்நாட்டு மக்களின் பேரன்பும் பேராதரவும், தேர்தல் களத்தில் விரைவில் நிரூபிக்கப்படப்போகிறது. விரைவில் நடைபெறவிருக்கும் தேர்தல் அரசியல் களத்தில் தங்களுடைய பலத்தை நிரூபிக்க போகிறது. நமது கனவு நனவாக இலக்கை எட்ட புரட்டிப் போடப் போகும் புரட்சி நிகழ இன்னும் சில மாதங்களே உள்ளன.

25
மாபெரும் மக்கள் சக்தி

1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவுகளை, 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இந்த மண்ணில் காணப் போகிறோம். மாபெரும் மக்கள் சக்தியான நீங்கள். இந்தத் திருப்புமுனைத் தருணத்தை நிரூபிக்கப் போவது நிச்சயம். இதை 32 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் இயக்கமாக இருந்து, தினம் தினம் மக்கள் மனம் அறிந்து உணர்ந்து வரும் நாம் சொல்வதில் அடர்ந்த, ஆழ்ந்த உண்மை இருப்பதை அனைவரும் அறியத்தான் போகின்றனர்.

35
கர்ப்பிணிப் பெண்கள்

தமிழக மக்களை உயிராகப் போற்றி மதிக்கும் இந்த விஜய் பற்றி உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். உங்கள் மீதான உள்ளன்பு மிக்க அக்கறையின் காரணமாக இப்போது ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். கர்ப்பிணிப் பெண்கள் கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள். உடல்நலம் குன்றியோர். பள்ளிச் சிறார்கள். மாற்றுத் திறனாளிகள் ஆகியோர். நம் கழக மாநாட்டை வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு உரிமை கலந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

45
ராணுவக் கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்க வேண்டும்

மாநாட்டுக்கு வரும்போதும், மாநாடு நிறைவடைந்து ஊருக்குத் திரும்பும்போதும் நம் கழகத் தோழர்கள் அனைவரும் ஒழுங்கையும் பாதுகாப்பையும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம், தகுதியும் பொறுப்பும் மிக்க ஓர் அரசியல் பேரியக்கம் என்பதை நமது ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டியது நமது தலையாய கடமை.

55
தேர்தல் அரசியல் போர்

மக்கள் நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட 'மனசாட்சி உள்ள மக்களாட்சி' என்னும் உன்னதமான அரசியல் அதிகார இலக்கை நோக்கி உறுதியுடன் பயணிக்கிறோம். மகத்தான தேர்தல் அரசியல் வரலாறு மீண்டும் நம் தமிழ்நாட்டு மண்ணில், நம்மால் நிகழப் போவது நிஜம். எனவே, அத்தகைய மாபெரும் அரசியல் விளைவை நிச்சயமாக நிகழ்த்திக் காட்டும் பேரறிவிப்பாக நமது மாநில மாநாட்டை மாற்றிக் காட்டுவோம். உங்கள் ஒவ்வொருவருக்காகவும் உணர்வு ததும்பும் மதுரை மண்ணில், இதயம் திறந்து இரண்டு கைகளை விரித்துக் காத்திருப்பேன். மதுரை பாரப்பத்தியில் கூடுவோம். உங்கள் விஜய், உரிமையுடன் அழைக்கிறேன். தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம் என தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories