இந்த ஊழல் திட்டமிடப்பட்ட ஊழல். இதற்கான முழு பொறுப்பையும் தமிழக முதல்வரே ஏற்க வேண்டும். இத்துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவதோடு, அவர்களின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட வேண்டும். இந்த விவகாரம் தீர்க்கப்படும் வரை மது ஆலைகள், டாஸ்மாக் நிறுவனம், மதுக்கடைகள், பார்கள் மூடப்பட வேண்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.