தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய்யின் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 10 குழந்தைகள் உட்பட 18 பெண்கள் உள்ளிட்டவர்கள் பலியாகினர்,
சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் போலீசாரிடம் 10,000 பேர் மட்டுமே கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட நிலையில், 25,000-க்கும் மேற்பட்டோர் கூடினர். மேலும் தவெக விஜய்யின் வருகை 4-7 மணி நேரம் தாமதமானதால் தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்தனர்.