ஆனால் இதுநாள்வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் 22,781 பட்டாதாரர்கள் மட்டுமே இத்திட்டத்தில் தங்களது விவரங்களைப் பதிவேற்றம் செய்துள்ளனர். இன்னும் 30 சதவீத விவசாயிகள் இன்னும் வேளாண் அடுக்ககம் திட்டத்தில் இணையாமல் உள்ளனர். ஆகவே பதிவு செய்யாத விவசாயிகள் தங்களது நில உடைமை ஆவண விவரங்கள், ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கணிணி சிட்டா, பட்டா கைபேசி எண் ஆகிய விவரங்களுடன் தங்கள் கிராமத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கள் அலுவலர்களை கிராம நிர்வாக அலுவலகத்தில் நேரில் சந்தித்து தங்களது நில உடைமை ஆவண விவரங்களை விடுபாடின்றி வேளாண் அடுக்ககம் திட்டத்தில் இணைக்கும் பணியினை உடன் முடித்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.