UDF மாடலை பார்த்து கத்துக்கோங்க.. பொங்கலன்றும் திமுகவை வம்புக்கு இழுத்த மாணிக்கம் தாகூர்.. கடுப்பில் உ.பி.க்கள்!

Published : Jan 15, 2026, 11:58 AM IST

ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வரும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், பொங்கல் தினமான இன்றும் திமுகவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். 

PREV
14
ஊசலாடும் திமுக, காங்கிரஸ் கூட்டணி

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக, காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளன. ஆனால் இந்த கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்ற நிலையில் தான் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் காங்கிரஸ் தொடர்ச்சியாக ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு வேண்டும். கூடுதல் சீட்டுகள் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருவது தான்.

24
ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு

அதுவும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு என்பதை தினமும் திமுகவுக்கு அழுத்தம் திருத்தமாக சொல்லி வருகிறார். இதனால் திமுக உடன்பிறப்புகள் இவரை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், பொங்கல் தினமான இன்றும் 'ஆட்சியில் பங்கு தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பதை கூறியிருக்கிறார் மாணிக்கம் தாகூர்.

மாணிக்கம் தாகூர் இன்று போட்ட பதிவு

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''தை பிறந்தால் வழி பிறக்கும்.. ஆட்சியில் பங்கு என்பது என்ன என்பதை நாம் அறிய ஒரு மாடல். கேரளாவின் UDF மாடல் கூட்டணி அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான நம்பிக்கையான பாதையை காட்டுகிறது. காங்கிரஸ் தலைமையேற்கிறது. ஆனால் அதிகாரம் குவிக்கப்படவில்லை; பகிரப்படுகிறது.

34
நட்பு +பங்கு இதுவே UDF அரசியலின் அடித்தளம்

நட்பு +பங்கு இதுவே UDF அரசியலின் அடித்தளம். UDF-ல் நாங்கள் தேர்தலை ஒன்றாகவே எதிர்கொள்கிறோம். பரஸ்பர நம்பிக்கையும், ஒரே அரசியல் நோக்கமும் அவர்களின் பலம். முக்கியமானது. தேர்தல் முடிந்ததும் கூட்டணிக்கு “பை-பை” சொல்லுவதில்லை. தேர்தலில் கூட்டாளிகள், ஆட்சியிலும் பங்கு பெறும் கூட்டாளிகளே.

உடன்பாடும், பொறுப்பும் கொண்டது

அமைச்சர் பதவிகளும் முக்கிய துறைகளும் பலத்தையும், உடன்பாட்டையும், பொறுப்பையும் அடிப்படையாகக் கொண்டு பகிரப்படுகிறது. ஆட்சி ஆதிக்கத்திற்காக அல்ல. IUML, Kerala Congress (M), RSP உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நிதி, கல்வி, பொதுப்பணித்துறை, தொழில், சமூக நலன், நீர்வளம் போன்ற முக்கிய அமைச்சகங்களை பொறுப்புடன் நிர்வகித்தன.

44
தேர்தலுக்குப் பின் துரோகம் இல்லை

இது பெயருக்கான பங்கீடு அல்ல. கூட்டணிக் கட்சிகள் மைய துறைகளை நிர்வகித்து, முடிவெடுத்து, முழுப் பொறுப்பையும் ஏற்றன. முக்கிய கொள்கை முடிவுகள் UDF ஒருங்கிணைப்பின் மூலம், கேரளாவின் சமூக-அரசியல் பல்வகைமையை மதித்து எடுக்கப்பட்டன. தேர்தலுக்குப் பின் துரோகம் இல்லை. வாக்குகள் எண்ணப்பட்டதும் கூட்டணியை ஒதுக்கும் அரசியல் இல்லை. இதுதான் UDF மாடலின் வித்தியாசம்.

ஒன்றாக ஆட்சி செய். ஒன்றாக மக்களுக்கு வழங்கு

UDF மாடல் = கூட்டணி தர்மம் செயல்பாட்டில். ஒன்றாகப் போராடு. ஒன்றாக ஆட்சி செய். ஒன்றாக மக்களுக்கு வழங்கு. இந்த ஜனநாயகமான UDF மாடல் 2026-லும் வெற்றி பெற வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும்.. நல்ல ஆட்சியாக மாறட்டும். ஆட்சியில் பங்கு. தை பிறந்தால் வழி பிறக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories