இந்த நிலையில், ஜனநாயகன் சென்சார் சர்டிபிகேட் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், பட தயாரிப்பு நிறுவனத்தின் மேல்முறையீட்டு தள்ளுபடி செய்து நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர்.
அப்போது 'ஜனநாயகன் படத்துக்கு 5,000 படத்துக்கு புக் செய்திருந்தோம். ஆனால் உயர்நீதிமன்றம் இதை கருத்தில் கொள்ளவில்லை. மக்கள் ஒரு படத்துக்காக 3 மாதங்களுக்கு மேலாக காத்திருக்க மாட்டார்கள்' என பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபங் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் ''ஜனநாயகன் பட வழக்கை விசாரிக்க எங்களுக்கு விருப்பம் இல்லை. உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதால் நாங்கள் தலையிட வேண்டிய அவசியல்லை. உயர்நீதிமன்றத்தில் உங்கள் தரப்பு கோரிக்கைகளை எடுத்துக் கூறுங்கள்'' என்று கூறி தள்ளுபடி செய்தனர்.