மேலும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு தொழில் தொடங்குவதற்கு பயிற்சிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி செய்த பொருட்களின் தரத்தை மேம்படுத்தி சந்தைப்படுத்த உதவப்படுகிறது. இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில், 1,01,963 குழுக்களைச் சேர்ந்த 10,56,816 மகளிர் உறுப்பினர்களுக்கு ரூ. 2118.8 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு 31.3.2021 வரை நிலுவையில் இருந்த ரூ.2,118.80 கோடி மதிப்புள்ள மகளிர் சுயஉதவிக் குழுக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 1,01,963 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குச் சேர்ந்த 10,56,816 பெண்கள் பயனடைந்துள்ளதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.