இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “14 - 07 - 2025 அன்று சென்னை, வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள YMCA திருமண மண்டபத்தில் டபெற்ற தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க செப்டம்பர் 9ம் தேதி மதுயைில் நடைபெறுவதாக இருந்த அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டகள் உரிமை மீட்பு குழுவின் மாநில மாநாடு கழக ஒயர்மட்ட குழு ஆலோசனையின்படி ஒத்திவைக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் பிரசாரம் மேற்கொள்ளும் அதே தேதியில் மாநாடு நடைபெற்றால் கூட்டம் குறைவாக வந்துவிடும் என்பதாலேயே பன்னீர்செல்வம் மாநாட்டை ஒத்தி வைத்திருப்பதாக விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.