தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை கொடுங்க..! முதலமைச்சர் ஸ்டாலின் கைக்கு சென்ற முக்கிய கடிதம்!

Published : Oct 15, 2025, 01:14 PM IST

தீபாவளிக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. பயண சிரமங்களைக் கருத்தில் கொண்டு, தீபாவளிக்கு அடுத்த நாளான அக்டோபர் 21ஆம் தேதியையும் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

PREV
16
தீபாவளி பண்டிகை

விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கொண்டாட்டம் தான். அதுவும் தொடர் விடுமுறை வந்தால் ஒரே ஆட்டம் பட்டாம் தான். இந்நிலையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20ம் தேதி திங்கட்கிழமை அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்கு முந்தைய நாட்களான அக்டோபர் 18 மற்றும் 19 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வருவதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளது.

26
தலைமைச் செயலகச் சங்கம்

இந்நிலையில் பண்டிகைக்கு அடுத்த நாளான அக்டோபர் 21ம் தேதி செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தலைமைச் செயலகச் சங்கம் வெளியிட்டு அறிக்கையில்: தீப ஒளித் திருநாளாம் தீபாவளிப் பண்டிகை வரும் 20ம் தேதி திங்கட்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என பெரும்பான்மையானோர் தங்களது குடும்பத்தினருடன் சொந்த ஊரில் கொண்டாடுவது வழக்கம். ஆனால், தீபாவளி திங்கட்கிழமை வருவதால், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து வெளியூர் செல்லும் பணியாளர்கள் 21-ம் தேதி செவ்வாய்க்கிழமை பணிக்குத் திரும்புவதில் மிகுந்த சிரமம் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது.

36
முதல்வருக்கு கோரிக்கை

எனவே, தீபாவளியை குடும்பத்தினருடன் சொந்த ஊரில் கொண்டாடும் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தீபாவளிக்கு மறுநாள் 21ம் தேதி ஒருநாள் மட்டும் ஈடுசெய்யும் விடுமுறை வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

46
பட்டதாரி ஆசிரியர் சங்கம்

அதேபோல், தீபாவளி முடிந்து வருகிற 21ம் தேதி அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலங்கங்களுக்கு பொது விடுமுறையாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து இந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தீபாவளி பண்டிகைக்கு மூன்று நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நாளில், பெரும்பாலான அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், அரசுப் பணியாளர்கள் தங்களது சொந்த ஊருக்குக் குடும்பத்துடன் செல்வார்கள்.

56
தமிழ்நாடு அரசு

பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவ, மாணவிகள் சொந்த ஊருக்குச் சென்று வருவார்கள். பொதுப் போக்குவரத்துக்கும் கடுமையான கூட்ட நெரிசல் இருக்கும். எனவே, தீபாவளிக்கு அடுத்த நாள் 21ம் தேதி செவ்வாய்க்கிழமை அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தமிழ்நாடு அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

66
4 நாட்கள் தொடர் விடுமுறை

கடந்த சில ஆண்டுகளாக அரசு ஊழியர்களின் கோரிக்கையை அடுத்து தமிழக அரசு தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. ஆகையால் இந்த முறையும் விடுமுறை அளிக்கப்படும். இதுதொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் ஓரிரு நாளில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க உள்ளதால் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குஷியில் இருந்து வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories