தமிழக அரசியல் களத்தில் புதிதாக களம் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தமிழகம் முழுவதும் உங்கள் விஜய் நான் வாரேன் என்ற தலைப்பில் மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் விஜய் செல்லும் இடமெங்கும் கட்டுக்கடங்காத கூட்டமானது கூடி வருகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டத்தில் நெரிசலில் சிக்க கொத்து கொத்தாக 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரின் முதல் தகவல் அறிக்கையான எப்ஐஆரில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.