தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாத கடைசி நாளில் போகிப் பண்டிகையுடன் தொடங்கிய விழா, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் என களைகட்டியது. இதையடுத்து, இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
27
ஏராளமானோர் குடும்பத்துடன் சுற்றுலாத் தலங்களில் கூடி காணும் பொங்கலை கொண்டாடுவர் என்பதால் தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
37
காணும் பொங்கலையொட்டி சென்னையில் 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காணும் பொங்கலையொட்டி மக்கள் அதிகம் கூடும் மெரினா, பெசன்ட்நகர் உள்ளிட்ட கடற்கரைகளிலும், கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடல், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
57
பொதுமக்கள் கடலில் இறங்க தடைவிதிக்கப்பட்டுள்ளதால், கடற்கரைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.மெரினா கடற்கரையில்15 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.