Pongal: காணும் பொங்கல் - களைகட்டிய பண்டிகை.. பொழுதுபோக்கு இடங்களில் குவிந்த மக்கள் க்ளிக்ஸ் !!

First Published Jan 17, 2023, 8:35 PM IST

Pongal: தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காணும் பொங்கல் சிறப்பாக கொண்டாட்டப்பட்டது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாத கடைசி நாளில் போகிப் பண்டிகையுடன் தொடங்கிய விழா, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் என களைகட்டியது. இதையடுத்து, இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

ஏராளமானோர் குடும்பத்துடன் சுற்றுலாத் தலங்களில் கூடி காணும் பொங்கலை கொண்டாடுவர் என்பதால் தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

காணும் பொங்கலையொட்டி சென்னையில் 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..2 ஆர்வக்கோளாறுகள்! உருட்டாமல் இருந்தால் சரி! விமான விவகாரத்தில் அண்ணாமலையை கிழித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

காணும் பொங்கலையொட்டி மக்கள் அதிகம் கூடும் மெரினா, பெசன்ட்நகர் உள்ளிட்ட கடற்கரைகளிலும், கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடல், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் கடலில் இறங்க தடைவிதிக்கப்பட்டுள்ளதால், கடற்கரைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.மெரினா கடற்கரையில்15 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க..யார் செய்த சேட்டை.? கர்நாடக வளர்ப்பு மகனை கைது செய்ய வேண்டும்.! விமான விவகாரம் குறித்து காயத்ரி ரகுராம் சவால்!

ஆங்காங்கே சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.குற்ற நிகழ்வுகளை தடுக்க ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை மெரினாவில் பாதுகாப்பு பணிகளுக்காக தமிழக காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..வாரிசு, துணிவு வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கிய டாஸ்மாக் !! பொங்கல் பண்டிகை மது விற்பனை இவ்வளவா.!

click me!