மேலும் நீதிமன்றத்தையும் பிளாக் மெயில் செய்ய முயற்சிக்க வேண்டாம். அது பலிக்காது, நாங்கள் இந்த வழக்கில் இருந்து விலக மாட்டோம். இப்படிப்பட்ட கோரிக்கையை நாங்கள் ஒரு போதும் ஏற்றதில்லை. தேவைபட்டால் சவுக்கு சங்கர் தலைமை நீதிபதியிடம் முறையிட்டு நிவாரணத்தை கோரலாம். இந்த அமர்வின் மீது நம்பிக்கை இல்லை என சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்திருந்தாலும், அவருடைய ஜாமீனை ரத்து செய்ய கோரும் வழக்கிலிருந்து நாங்கள் விலக போவதில்லை எனவும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும், சவுக்கு சங்கர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இன்று பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.