முன்பு பாஜக-வுக்குச் சாதகமாக இருந்த ஜார்க்கண்டில், ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட சம்பவம் பாஜக-வுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த கைது நடவடிக்கையால் பழங்குடி மக்களிடையே பாஜக-வுக்கு ஆதரவு குறைந்தது.
மேலும், புதிதாகத் தொடங்கப்பட்ட டைகர் ஜெய்ராம் மஹதோவின் ஜார்க்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி, பாஜக-வின் முக்கிய ஓபிசி வாக்குகளான குர்மி-குஷாவாஹா வாக்குகளைப் பிரித்துவிட்டது. இதனால் தற்போது ஜார்க்கண்டில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைய வாய்ப்பு இல்லை என்ற நிலை உள்ளது.
இந்தச் சூழலில், ஜே.எம்.எம். உடன் கூட்டணி அமைத்து பாஜக ஆட்சியில் அமர்ந்தால், பழங்குடி மக்களிடையே பாஜக-வுக்கு உண்டான கோபம் குறைந்து, அடுத்த தேர்தலில் பாஜக-வுக்கு ஜார்க்கண்டில் ஒரு அரசியல் எழுச்சி கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது.