கோவை மக்களே ரெடியா.? களம் இறங்க தயாராகும் காளைகள், காளையர்கள்- ஜல்லிக்கட்டுக்கு தேதி குறித்த அரசு

Published : Apr 14, 2025, 01:39 PM ISTUpdated : Apr 14, 2025, 05:11 PM IST

மதுரைக்கு அடுத்து, கோவையில் மீண்டும் ஜல்லிக்கட்டு! ஏப்ரல் 27ல் செட்டிபாளையத்தில் நடைபெறும் இந்த பிரமாண்ட போட்டியை உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். ஆயிரக்கணக்கான காளைகள், காளையர்கள் பங்கேற்க உள்ளனர்.

PREV
13
கோவை மக்களே ரெடியா.? களம் இறங்க தயாராகும் காளைகள், காளையர்கள்- ஜல்லிக்கட்டுக்கு தேதி குறித்த அரசு
jallikattu

Jallikattu in Coimbatore after 3 years! On April 27th in Chettipalayam! தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு போட்டியாகும், அந்த வகையில் மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய ஜல்லிக்கட்டுகள் உலக புகழ் பெற்றது. இந்த ஜல்லிக்கட்டை பார்க்க பல்வேறு நாடுகளில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மதுரையில் குவிவார்கள்.

அந்த வகையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி, 13,14,15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான காளைகள், நூற்றுக்கணக்கான காளையர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கார், பைக், தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
 

23
Jallikattu in Coimbatore

கோவையில் ஜல்லிக்கட்டு போட்டி

இந்த போட்டியை மற்ற மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொங்கு மண்டலமான கோவையிலும் கடந்த 2018 மற்றும் 2022ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு போட்டியானது மீண்டும் கோவையில் நடைபெறவுள்ளது.

அந்த வகையில், செட்டிபாளையம் அருகே L&T பைபாஸ் சாலையில் 60 ஏக்கர் நிலத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.  ஏப்ரல் 27-ம் தேதி நடக்க நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி துவக்கி வைக்கவுள்ளார்.

33
Kovai jallikattu

களத்தில் இறங்க தயாராகும் காளைகள்

இதனையடுத்து  ஜல்லிக்கட்டு போட்டிக்கான மேடை, வாடிவாசல், காளைகளை சேகரிக்கும் இடம் போன்ற வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த போட்டியில் மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட காளையர்கள் பங்கு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.

மேலும் ஆம்புலன்ஸ் செல்வதற்கான வசதிகளும், மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ உதவி கிடைப்பதற்காக கோவை அரசு மருத்துவமனை தயார் நிலையில் இருக்கும் படி ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 

Read more Photos on
click me!

Recommended Stories