இருப்பினும், 500 கி.மீட்டருக்கும் மேல் பயணிப்போருக்கு டிக்கெட் உயர்வு இருக்கும். ஏசி அல்லாத ரயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கு, ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசா என்ற விகிதத்தில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதாவது, 500 கி.மீட்டருக்கும் மேலான பயணத்தில், ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பைசா என்ற விகிதத்தில் கணக்கிட்டு கட்டணம் உயர்த்தப்படும். உதாரணமாக, 1,000 கி.மீட்டர் தூரப் பயணத்திற்கான டிக்கெட் கட்டணம் முன்பு இருந்ததை விட ரூ.10 அதிகரிக்கும்.