அந்தோணி ராபின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து அவரது மனைவி அம்முவை சந்தேகத்தின் பேரில் அவரிடம் தீவிரமாக விசாரித்தனர். அப்போது கள்ளக்காதலை கண்டித்ததால் தனது கணவனை, உயிரோடு பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் எரித்து கொன்றதாக மனைவி தெரிவித்தார்.