நள்ளிரவில் ஏற்பட்ட கொடூரம்
குறிப்பாக வயநாடு, மலப்புரம், கன்னூர் போன்ற இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக நேற்று 2 மணியளவில் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவானது சூரல்மலை பகுதியில் உள்ள பாலத்தை அடித்து கொண்டு சென்றுள்ளது. மேலும் 300க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகியுள்ளது. கன மழை மற்றும் இருள் சூழ்ந்த நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற நிலச்சரிவால் மக்களால் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.