கன மழையால் நிரம்பிய காவிரி
கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஒரு சில வாரங்களாக பெய்து வந்த கன மழையின் காரணமாக அங்குள்ள கேஆர்எஸ், கபினி உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டியது. இதன் காரணமாக ஒரு லட்சத்து 60ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே வாரத்தில் இரண்டு மடங்காக அதிகரித்தது.
இந்தநிலையில் கர்நாடகாவில் தற்போது மழை சற்று குறைந்துள்ளதால் வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ஒரு லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 60ஆயிரம் முதல் 70ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.