Palani Murugan Temple:பழனி முருகன் கோவில் செல்லும் பக்தர்களுக்கு! கோவில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

First Published Jul 30, 2024, 8:57 AM IST

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோவிலில் நாளை ரோப் கார் சேவை  ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Palani Murugan Temple

உலக பிரசித்தி பெற்ற அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துதள்ளது. இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் பத்கர்கள் வருகின்றனர்.  பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து பழனி மலை கோவிலுக்கு செல்ல படிப்பாதை இருந்தாலும் சிரமமின்றியும், விரைவாகவும் செல்ல ரோப்கார் மற்றும் மின் இழுவை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

Rope Car

ஆனால் பெரும்பாலான பக்தர்கள் ரோப்கார் சேவையை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால் இயற்கை அழகை ரசித்தபடி செல்லலாம் என்பதால், பெரும்பாலானோர் ரோப்காரில் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை கருதி ரோப்கார் சேவை பராமரிப்பு பணி காரணமாக தினமும் 1 மணி நேரமும் மாதத்துக்கு ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம். 

இதையும் படிங்க: School Colleges Holiday: ஆகஸ்ட் 3ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான சூப்பர் அறிவிப்பு!

Latest Videos


Rope Car Service Cancelled

அதன்படி நாளை ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் ரோப்கார் சேவை நாளை ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  எனவே மின் இழுவை ரயில் மற்றும் படிப்பாதையை பயன்படுத்தி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

click me!