மதுபானம் டோர் டெலிவரி
இன்றைய இளைஞர்களை கவர பல திட்டங்களையும் மதுவிலக்கு துறை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் உயர்ரக மது அருந்தும் வகையில் எலைட் கடைகளும் தமிழகத்தில் முக்கிய நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. தனியாருக்கு போட்டியாக அரசால் நடத்தப்படும் இந்த கடையில் வெளிநாட்டு மதுவகைகளும் கிடைக்கும் நிலை உள்ளது. இது மட்டுமில்லாமல் ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் மதுபானங்களை டெலிவரி செய்யும் நடைமுறை இருக்கும் நிலையில் அதனை மற்ற மாநிலங்களிலும் விரிவுப்படுத்த திட்டமானது வகுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் டெல்லி, கர்நாடகா, ஹரியானா, பஞ்சாப், தமிழ்நாடு, கோவா, கேரளா போன்ற மாநிலங்கள் வீட்டிற்கே நேரடியாக மதுபானங்களை டெலிவரி செய்வதை அனுமதிக்கும் திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.