இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் (அதாவது 1 மணி வரை) தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில் இன்றும், நாளையும் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழையும், சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் பிற்பகலில் கனமழை பெய்யும் டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார்.