வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை முடிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி கூடுதல் பணிகளை மேற்கொள்வதால் ஒரு மாத ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அதீத பணி நெருக்கடி காரணமாக SIR பணிகளை நாளை முதல் புறக்கணிப்பதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு இன்று மாலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் பெருந்திரள் முறையீடு செய்து, நாளை மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் SIR பணிகளை குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.