மேலும் அதிகபட்ச பணிக்கொடை தொகையில் இருந்து 25 சதவீதம் அதாவது ரூ.20 லட்சத்திற்கு ரூ.5 லட்சம் என்ற அளவில் பணிக்கொடை உயர்த்தப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியான 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில் இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் 7வது ஊதிய கமிஷனின் பரிந்துரைப்படி ஓய்வு கால பணிக்கொடை மற்றும் இறப்பு கால பணிக்கொடையானது ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டது.