இதுதொடர்பாக ராமதாஸ் அணியில் செயல் தலைவராக செயல்பட்டு வரும் ராமதாஸ் மகள் ஸ்ரீ காந்தி பிரபல தனியார் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில்: ஜி.கே.மணியால் தான் குடும்பம் பிரிந்தது என்பது தவறான ஒன்று. இருவரையும் ஒன்று சேர்க்க பல்வேறு முயற்சிகளை அவர் மேற்கொண்டார். கண்டிப்பாக சொல்கிறேன் ஜி.கே.மணி மீது எந்த தவறும் இல்லை. அவரை பிடிக்காத சிலர் இதுபோன்று கூறி வருகின்றனர்.
அவரை சுற்றியுள்ள அனைவருக்கும் தெரியும். ராமதாஸ் பொறுத்த வரையில் யார் சொல்வதை ஏற்றுக்கொள்ளமாட்டார். தான் எடுப்பது தான் முடிவு என்பதில் உறுதியாக இருப்பார். அவரை யாராலும் முடிவு எடுக்க வைக்க முடியாது என கூறியுள்ளார்.