தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில் உருவான டிட்வா புயல் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த புயலால் சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிட்வா புயல் 30ம் தேதி அதிகாலை சென்னையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, இராமநாதபுரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்யகூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.