ஜனவரி 1ம் தேதி முதல் முதற்கட்டமாக ரயில்களில் தலையணை, பெட்ஷீட் வழங்கும் வசதி கொண்டு வரப்படும். இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மற்ற ரயில்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
அதாவது சென்னை-மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ், சென்னை-சென்ட்ரல் மங்களூரு எக்ஸ்பிரஸ், சென்னை-மன்னார்குடி, சென்னை-திருச்செந்தூர், சென்னை-பாலக்காடு, சென்னை-செங்கோட்டை (சிலம்பு எக்ஸ்பிரஸ்), தாம்பரம்-நாகர்கோவில், சென்னை-திருவனந்தபுரம், சென்னை எழும்பூர்-மங்களூரு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் தலையணை, பெட்ஷீட் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பால் பயணிகள் குஷியடைந்துள்ளனர்.