நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான சூப்பர் அறிவிப்பு!

Published : Nov 28, 2025, 02:15 PM IST

தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள டிட்வா புயல் வட தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதால், பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.

PREV
14

இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள டிட்வா புயல் மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்த நிலையில் அதன் வேகம் குறைந்துள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 4 கி.மீ வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்கிறது.

24

தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 520 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரி தென் கிழக்கே 420 கி.மீட்டர் தொலைவில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் நவம்பர் 30ம் தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு புதுச்சேரி அதை ஒட்டிய தெற்கு ஆந்திர பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.

34

இதன் காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டில் கடுமையான மழைபொழிவு ஏற்படக் கூடும் தெரிவித்துள்ளது. அதாவது ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், சிவகங்கை, தூத்துக்குடி, அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும், குமரி, நெல்லை, விருதுநகர், மதுரை, திருச்சி, பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

44

இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக கடலூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories