பின்னர் முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்தார். இந்நிலையில் திமுகவில் இணைந்த மைத்ரேயனுக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: கழக சட்டதிட்ட விதி 31, பிரிவு 21–ன்படி திமுக கல்வியாளர் அணி துணைத் தலைவராக டாக்டர் வா. மைத்ரேயன் (29, முதல் அவென்யூ, பெசன்ட் நகர், சென்னை – 600090)அவர்கள் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.