கோவைக்கு வருகிற 19 ஆம் தேதி வருவதை உறுதி செய்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமர் உரையாற்ற உள்ளதாக தெரிவித்தார்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ஒவ்வொரு மாவட்டத்துக்கும் விவசாயத்துக்கான ஒரு அதிகாரி இருப்பார். ஆனால் அவர் தங்கள் பொறுப்பை சரியாக நிறைவேற்றுவதில்லை. தமிழக அரசு விவசாயத்திற்கு உரிய முன்னுரிமை அளிப்பதில்லை. பிரதமர் நரேந்திர மோடி வரும் 19ஆம் தேதி கோவை வருகிறார். தென்னிந்திய இயற்கை விவசாய மாநாட்டில் கலந்து கொண்டு 50க்கும் மேற்பட்ட விவசாய விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுகிறார். பிரதமர் விவசாயத்திற்காக பிரத்யேகமாக நேரத்தை ஒதுக்கி வருவது குறிப்பிடத்தக்கது” என்றார்.
25
நாட்டில் தீவிரவாதிகள் உற்பத்தியாகக் கூடாது
மேலும் “நாட்டுக்குள் தீவிரவாதம் உற்பத்தியாகக் கூடாது. அது எந்த மதத்துடனும் சம்பந்தப்படாத ஒன்று. அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும். தமிழகத்தில் முதலமைச்சர் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி அதிகம் உள்ளது. சரியான அதிகாரிகளை கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். மதத்தின் பெயரில் தீவிரவாதம் நடக்கக் கூடாது; மதத் தலைவர்கள் அதைப் பற்றி திறந்தவெளியில் பேச வேண்டும், ஒன்றிணைந்து சமூக ஒற்றுமையை பேண வேண்டும்.
35
முதல்வர் காவல்துறையை சிறப்பாக கையாளவில்லை..
சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. குற்றங்கள் பெருகி வருகின்றன. திமுக அரசு காவல்துறையை சரியாகக் கையாளவில்லை. காவல்துறை கோட்டை விட்டுள்ளது. கோவை கல்லூரி மாணவி சம்பவத்தையும் இதன் ஒரு எடுத்துக்காட்டாக பார்க்கலாம். முதலமைச்சர் காவல்துறையை இன்னும் சிறப்பாக கையாள வேண்டும்.
பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் முக்கிய நபர் தான். ஆனால் என்.டி.ஏ கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும். வாக்காளர் பட்டியலில் குழப்பம் இருப்பதை மறுக்க முடியாது. அதிகாரிகள் அதை சரி செய்ய வேண்டும். யாருக்கும் பயம் தேவையில்லை; அது BLO வின் பொறுப்பு. தமிழகத்தில் 5 கோடிக்கும் மேல் பூர்த்தி செய்யப்பட்ட பார்ம்கள் தேர்தல் ஆணையத்திடம் வந்துள்ளதாகத் தகவல் உள்ளது.
55
அயன்மேனாக மாறுவதே இலக்கு
தமிழ்நாடு விளையாட்டில் சிறந்த மாநிலம். ‘அயன்மேன்’ போட்டியை தமிழகத்திலும் நடத்த வேண்டும். முழுமையான அயன்மேனாக மாறுவது எனது இலக்கு.
“இன்னும் தேர்தல் சூடு பிடிக்கவில்லை. டிசம்பர், ஜனவரியில் கூட்டணி விவரம் தெரியும். அரசியல் ஆட்டத்தில் இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவதே நோக்கம்,” என்றார்.