தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் அடுத்த சில தினங்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு கூட்டணியை வலுப்படுத்துதல், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துதல், தேர்தல் வாக்குறுதிகளை உருவாக்குதல், பொதுக்கூட்டம், பிரசாரம் என அரசியல் கட்சிகள் அடுத்தடுத்து தங்கள் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.