அதன் பெயரில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்குற ஏராளமான பெண்களை காளியம்மாள் இணைத்து வருகிறார். அவர் எப்போது வேண்டுமானாலும் புதிய அமைப்பு ஒன்றை தொடங்கலாம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, மோடி நிறைய உத்தரவுகளை பரப்பித்து இருக்கிறார். அந்த வகையில தமிழ்நாட்டில ஏற்கனவே இருந்த கூட்டணி தவிர, புதிய கட்சிகளையும் கூட்டணியில் சேர்த்து தேர்தலை சந்திக்க வேண்டும். நான் சென்னைக்கு வரும்போது கூட்டணி இறுதி முடிவு செய்து இருக்க வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறார். அதன் அடிப்படையில உள்துறை அமைச்சர் அமித் ஷா, எடப்பாடி பழனிசாமியிடம் தொடர்ந்து ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக காளியம்மாள் புதிய அமைப்பை தொடங்குவதை கைவிட்டு, பாஜகவில் இணையாமல், இன்று மாலை எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.