சந்திப்பின் போது, சட்டப்பேரவை தொகுதி வெற்றி நிலவரம், எஸ்ஐஆர் பணிகள், அரசு திட்ட செயல்பாடுகள், மாவட்ட அமைச்சர், தொகுதி பொறுப்பாளர், மாவட்ட செயலாளர் உள்ளிட்டோரின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்து வருகிறார். இதுவரை 100க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை தொகுதி நிர்வாகிகளுடன் உரையாடியுள்ளார். அதே நேரம், புகார்கள் வரும் பட்சத்தில் அது குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் மாற்று கட்சியினர் ஆளும் திமுகவில் இணைந்து வருகின்றனர்.