இன்று கன முதல் மிக கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில்? டெல்டா வெதர்மேன் அலர்ட்

Published : Dec 03, 2025, 09:43 AM IST

சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்துள்ளதால், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட வடகடலோர மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன முதல் மிக கனமழை எச்சரித்துள்ளது. 

PREV
14
காற்றழுத்த தாழ்வு பகுதி

சென்னைக்கு 100 கி.மீ தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டல உள்நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் ஒரு பகுதி ஏற்கனவே தரைப்பகுதிக்கு வந்துவிட்டது. மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் தெற்கு தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்கிறது. அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

24
டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர்

இந்நிலையில் சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் இன்றும் கன முதல் மிககனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள பதிவில்: இன்று அதிகாலை மாமல்லபுரத்திற்கு தெற்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து விழுப்புரம் மாவட்டத்தில் நிலைக்கொண்டுள்ளது.

34
வடகிழக்கு பருவமழை

அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழந்து அரபிக்கடல் நோக்கி நகரும். தமிழக நிலப்பரப்பில் நிடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இன்றும், நாளையும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தே காணப்படும். சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்கள் & வடக்கு உள் மாவட்டங்களில் இன்றும் கன முதல் மிககனமழை வரை பதிவாகும். தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா & மேற்கு மாவட்டங்களிலும் இடி,மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு. ஒட்டுமொத்தமாக வடகிழக்கு பருவமழை இன்றும், நாளையும் தீவிரமடைந்து காணப்படும் என தெரிவித்துள்ளார்.

44
கனமழை எச்சரிக்கை

இதனிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது (காலை 10 மணிவரை) 22 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை காற்றுடன் கூடிய கனமழையும், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மழைக்கு வாய்ப்புள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories