இந்நிலையில் வீட்டில் இருந்த ஆறுமுகம் தனது மனைவி வெளியே கடைக்கு சென்ற பின்னர் கட்டிலில் படுத்திருந்த மகளிடம் கட்டிய கணவனை விட்டுவிட்டு ஏன் இப்படி வேறு ஒருவருடன் சென்றாய் எனக்கேட்டுள்ளார். இதுதொடர்பாக தந்தை, மகள் இடையே தகராறாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த தந்தை வீட்டில் இருந்த கத்தியால் மகள் சிம்யாவின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டிலேயே அமர்ந்து அழுது கொண்டிருந்தார்.