இந்நிலையில் தமிழ்நாட்டில் தினமும் ரூ.2 லட்சத்திற்கும் கூடுதலாக மது விற்பனையாகும் கடைகளில் இன்னுமொரு கவுண்டரை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் தினசரிரூ.2 லட்சத்துக்கு மேல் மதுவிற்பனை நடைபெறும் 1,000டாஸ்மாக் கடைகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்குள் இந்த கூடுதல் கவுண்டர்கள் திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.