TASMAC Shop: டோட்டலாக மாறப்போகும் டாஸ்மாக் கடை! என்னென்ன வசதிகள் வரப்போகுது தெரியுமா? குஷியில் குடிமகன்கள்!

Published : Oct 19, 2024, 01:29 PM ISTUpdated : Oct 19, 2024, 01:31 PM IST

TASMAC Shop:தமிழ்நாட்டில்  3500-க்கும்  கூடுதலான கடைகளில், அதாவது  கிட்டத்தட்ட 75% கடைகளில் தினமும் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக மது விற்பனையாகிறது.

PREV
17
TASMAC Shop: டோட்டலாக மாறப்போகும் டாஸ்மாக் கடை! என்னென்ன வசதிகள் வரப்போகுது தெரியுமா? குஷியில் குடிமகன்கள்!
tasmac

தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி மொத்தம் 4775 மதுக்கடைகள்  செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 3500-க்கும்  கூடுதலான கடைகளில், அதாவது  கிட்டத்தட்ட 75% கடைகளில் தினமும் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக மது விற்பனையாகிறது. இவற்றில் பெரும்பாலான கடைகளில் ஏற்கனவே இரண்டு அல்லது மூன்று விற்பனைக் கவுண்டர்கள் உள்ளன. 

27

ஆனாலும், இடப்பற்றாக்குறை, பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக, அனைத்து கடைகளிலும் இதை நடைமுறைபடுத்த முடியவில்லை. அப்படி இருந்த போதிலும் மாலை மற்றும் வார விடுமுறை நாட்களில் வாடிக்கையாளர் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை. 

இதையும் படிங்க: Government Holiday: நவம்பர் 1ம் தேதி பொது விடுமுறை! குஷியில் பள்ளி மாணவர்கள்! ஆனால் ட்விஸ்ட் வைத்த தமிழக அரசு!

37

இந்நிலையில் தமிழ்நாட்டில் தினமும் ரூ.2 லட்சத்திற்கும் கூடுதலாக மது விற்பனையாகும் கடைகளில் இன்னுமொரு கவுண்டரை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  அதன்படி, தமிழகத்தில் தினசரிரூ.2 லட்சத்துக்கு மேல் மதுவிற்பனை நடைபெறும் 1,000டாஸ்மாக் கடைகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்குள் இந்த கூடுதல் கவுண்டர்கள் திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

47

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து மதுவுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் அன்புமணி ராமதாஸ் மது வணிகத்தை அதிகரிப்பது மட்டும் தான் திராவிட மாடல் அரசின் ஒற்றை மந்திரமா? என கூறி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: Diwali Bonus: இன்ப அதிர்ச்சி! அரசு ஊழியர்களுக்கு ரூ.7000 தீபாவளி போனஸ் அறிவிப்பு!

57

அதில், மதுக்கடைகளில் ஒரு சில நிமிடங்கள் கூட வாடிக்கையாளர்கள் காத்திருக்கக் கூடாது என்று நினைத்து  கூடுதல் கவுண்டர்களை திறக்கிறது என்றால் அரசின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது. வருவாய் கொடுத்து வாழ வைக்கும் மது வாடிக்கையாளர்கள் நலனை அரசு எந்த அளவுக்கு பாதுகாக்கிறது என்பதற்கு இதுவே சான்று.

67

மதுவை மட்டுப்படுத்துவது தான் அரசின் கொள்கையாக இருக்க வேண்டும். மது வணிகத்தை ஊக்குவிக்கும் செயல்களில் அரசு ஈடுபடக்கூடாது. ஏற்கனவே அதிக அளவில் மது வணிகம் நடைபெறும் கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுண்டர்களை திறப்பதென்பது மது வணிகம் அதிகரிப்பதற்கே வழிவகுக்கும். 

இதையும் படிங்க:  TASMAC Shop: குடிமகன்களுக்கு குஷியான செய்தி ! டாஸ்மாக் கடைகளில் சூப்பர் ஏற்பாடு!

77

எனவே, மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுண்டர்களை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, படிப்படியாக மதுக்கடைகளை மூடி தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories