தவெக மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுகவை சேர்ந்த சி.வி. சண்முகம். சி.விஜயபாஸ்கர் 25 எம்.எல்.ஏ.க்கள் தவெக ஆட்சிக்கு ஆதரவாகவும், இபிஎஸ் தரப்பினர் எதிராகவும் வாக்களித்தனர். இதனையடுத்து இவர்களின் மாவட்ட செயலாளர்களின் பதவி பறிக்கப்பட்டது. இதனிடையே யாரும் எதிர்பாராத விதமாக அதிமுக எம்எல்ஏக்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய 4 தங்களது பதவிகளை ராஜினாமா செய்த கையோடு தவெகவில் இணைந்தனர். அதன் பின்னர் பொதுச்செயலாளர் இபிஎஸ்யுடன் மீண்டும் சமரசம் உருவாகி அதிருப்தி அணியினர் மீண்டும் கட்சியில் ஐக்கியமாகினர்.