செங்கோட்டையன் பேச்சுக்கு ஆதரவாக அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரத்தில் கூட செங்கோட்டையன் தொடர்பாக பேசாமல் அமைதி காத்து வந்தார். செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி வருகை தந்துள்ள நிலையில் கே.பி. முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். சுமார் 2 மணிநேரமாக நடைபெற்ற ஆலோசனை நிறைவு பெற்றது.