TASMAC overcharging seller suspension : தமிழகத்தில் மது விற்பனை தான் பணத்தை கொட்டு கொட்டு என கொட்டுகிறது. அந்த வகையில் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக்கடைகள் தமிழகம் முழுவதும் உள்ளது. இந்த கடைகளில் முற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது.
அந்த வகையில் நாள் தோறும் 100 முதல் 120 கோடி ரூபாயும், பொங்கல், தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய விஷேச நாட்களில் 150 கோடி ரூபாய் வரை மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதால் அரசின் திட்டங்களை செயல்படுத்த பெரிதும் உதவியாக உள்ளது.