இதையடுத்து இருவரையும், தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது சர்வதேச போதை கடத்தும் கும்பலுக்கு, கூலிக்காக போதை கடத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து போதை பொருள் அடங்கிய சாக்லேட்கள் கொடுத்து இதை சென்னை விமான நிலையத்தில் சென்று இறங்கியதும் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் வாங்கிக் கொண்டு பணத்தை கொடுத்து அனுப்பி விடுவார்கள் என்றும் தெரிய வந்தது.