திருமணத்தின் போது 120 பவுன் நகை, 25 லட்சம் பணம், 38 லட்சம் இன்னோவா கார் உள்ளிவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இவ்வளவு நகை, பணம் கொடுத்தும் ப்ரீத்தியிடம் அவரது கணவரும், மாமியாரும் கூடுதல் வரதட்ணை கேட்டு கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் தம்பதிக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 11ம் தேதி ப்ரீத்தி தனது தாய் வீட்டிற்கு திரும்பி வந்து விட்டார்.