Crime News: திருமணமான 48 நாட்களில் விசாகா என்ற பெண் தற்கொலை செய்துகொண்டார். வரதட்சணை கொடுமை மற்றும் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் சிசிடிவி மூலம் கண்காணித்து சித்ரவதை செய்ததால், அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள தானேயே அடுத்த அம்பர்நாத்தில் வசிக்கும் மருத்துவர் நிதின் தில்கர். இவருக்கும் விசாகா(26) என்ற பெண்ணுக்கும் ஏப்ரல் மாதம் 30ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணமன சில நாட்களிலேயே வரதட்சணை கேட்டு விசாகாவை வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்ரவதை செய்து வந்துள்ளனர். விசாகா வீட்டில் உள்ளவர்களை தவிர வேறு யாரிடமும் பேச விஷாகாவிற்கு தடை விதித்துள்ளனர்.
24
கணவர் வீட்டார் டார்ச்சர்
அதுமட்டுமல்லாமல் கணவர் தனது வீட்டிற்குள்ளும், வீட்டிற்கு வெளியேயும் சிசிடிவி கேமராவை பொருத்தி மனைவியின் ஒவ்வொரு அசைவையும் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளார். மேலும் மனைவி விசாகாவை அடித்து உதைத்துள்ளார். இந்நிலையில் பொறுமையை இழந்த விசாகா கணவர் மற்றும் அவரின் வீட்டாரின் டார்ச்சர் தாங்க முடியாததால் வீட்டில் தூங்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
34
திருமணமான 48 நாளில் தற்கொலை
விஷாகாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. மருத்துவர் நிதின் தில்கர், தனது மனைவி விசாகாவின் நடத்தையில் சந்தேகப்பட்டதை அடுத்து சிசிடிவி கேமரா பொருத்தி அவரை கண்காணித்து வந்துள்ளார். வீட்டின் எல்லையை தாண்டி விசாகா அக்கம்பக்கத்தினருடன் சாதாரணமாக பேசினால் கூட, அவரை மிருகத்தனமாக கணவர் மற்றும் குடும்பத்தினர் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
புகுந்த வீட்டில் டார்ச்சரை அனுபவித்த விசாகா, இந்த துயரத்தை தனது தாயிடம் போனில் கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து விஷாகாவை தங்களது வீட்டிற்கு அழைத்து வர அவரது பெற்றோர் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அதற்குள் விஷாகா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மனைவியை தற்கொலைக்கு தூண்டிய மருத்துவர் நிதின் தில்கர், அவரது தாய் சாயா மற்றும் சகோதரர் நினாத் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருமணமான 48 நாட்களில் விஷாகா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.