e-KYC சரிபார்ப்பு: ரேஷன் கார்டுகளில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் விரல் ரேகை அல்லது விழித்திரை விபரங்கள் (e-KYC) நியாயவிலைக் கடைகளில் சரியாக புதுப்பிக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.
ஆதார் இணைப்பு: குடும்பத்தில் உள்ள அனைவரின் ஆதார் எண்களும் ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.
பெயர் நீக்கம்/சேர்த்தல்: குடும்பத்தில் யாரேனும் இறந்திருந்தால் அல்லது பெண்களுக்குத் திருமணம் ஆகியிருந்தால் அவர்களின் பெயரை கார்டில் இருந்து முறைப்படி நீக்கிவிடுங்கள். அதேபோல், புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பெயர்களைச் சேர்த்துக் கொள்வதும் முக்கியமாகும்.
தவறாமல் ரேஷன் வாங்க வேண்டும்: தொடர்ந்து சில மாதங்கள் ரேஷன் பொருட்கள் எதுவும் வாங்காமல் இருந்தால், அந்த கார்டு 'செயல்படாத கார்டு' (In-active Card) பட்டியலுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. ஆகவே இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கி விடுங்கள்.