இது தொடர்பாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், '2026 மார்ச் 16 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கான 4 இடங்களில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள 2 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக திருச்சி சிவா, எம்.பி.எஸ், பேராசிரியர்.ஜே.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எப்இ., எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.எல், பி.எச்டி ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்படுகிறது' என்று கூறப்பட்டுள்ளது.