இந்நிலையில் தங்க தமிழ்செல்வனின் மகன் நிஷாந்த் (30). உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். மதுரை கே.கே.நகர் லேக் வியூ பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். தனது கர்ப்பிணி மனைவியுடன் தரிசனம் செய்ய தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலுக்கு வந்துள்ளார். கோவில் வாசலில் தந்தை, மகனனுமான சமய முத்து (56), மணிகண்ட பிரபு (25) இருவரும் தேங்காய், பூ, பழ விற்பனை செய்து வருகின்றனர். தரிசனத்திற்காக வந்திருந்த நிஷாந்த், அர்ச்சனை தட்டு வாங்கியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.