திருவண்ணாமலை கார்த்திகை தீபம்
திருவண்ணாமலையில் தீப திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது. அண்ணாமலையார் கோவிலில் உலகப் புகழ் பெற்ற கார்த்திகை தீபத்திருவிழாவானது வருகிற 13-ம் தேதி அண்ணமலையார் கோயில் கருவறையில் அதிகாலையில் பரணி தீபமும், மாலையில் 2ஆயிரத்து 668 அடி உயர மலையின் மீது மகாதீபமும் ஏற்றப்பட உள்ளது.
இந்த விழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகைபுரியவுள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் பெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழை கொட்டியது.