சிபிஎம் மாநாடு முக்கிய நிகழ்வுகள் என்ன.?
இதனையடுத்து மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று காலை 8 மணியளவில் தியாகிகள் நினைவு செங்கொடி ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் உள்ளிட்ட மூத்த தலைவர் பங்கேற்றுள்ளனர்.
இதனையடுத்து இன்று காலை 10.30 மணியளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு தொடங்கியது. மாநாட்டில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் மாணிக் சர்க்கார், தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்டவர்கள் பங்கெடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து இன்று மாலையில் திரைப்பட இயக்குநர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.