முதியவரை கடித்த ராட்வீலர் நாய்
வெளியில் நாய்களை நடைப்பயிற்சிக்காக அழைத்து வரும்போது வாயைக் கட்டி அழைத்து வரவேண்டும் எனவும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால் மாநகராட்சியின் விதிகளை மீறி தொடர்ந்து பல நாள் உரிமையாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக குளத்தூர் புத்தாகரம் பகுதியில் ராட்வீலர் நாயை ஏவி விட்டு வயதான தம்பதியினரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாய் தொடர்பாக 75 வயதான தம்பதியினரான மாரியப்பன் மற்றும் அவரது மனைவி ஆகியோர், நாய் உரிமையாளரிடம் முறையிட்ட போது ராட்வீலர் நாயை விட்டு கடிக்க விட்டுள்ளார்.