மீண்டும் கோரிக்கை வைத்த ஸ்டாலின்
இந்த நிலையில் இந்த கடிதத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்த முதலமைச்சர் ஸ்டாலின். மீண்டும் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டுள்ளார். அந்த பதிவில், எல்லை நிர்ணயம் தொடர்பான மாநிலங்களின் கவலைகள் குறித்து எங்கள் தீர்மானங்களை வழங்க,
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் சேர்ந்து, உங்களை சந்திக்க நேரம் கோரியுள்ளேன். நமது மக்களுக்கு இந்த முக்கியமான பிரச்சினையில் எங்கள் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை தெரிவிக்க நாங்கள் அவசரமாக உங்கள் நேரத்தைக் கோருகிறோம். உங்கள் விரைவான பதிலுக்காகக் காத்திருக்கிறோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.